Monday, April 18, 2016

Jaffna Muslim: 21 முஸ்லிம் எம்.பி.க்களும், ஓரணியில் திரளுகின்றனர்...

Jaffna Muslim: 21 முஸ்லிம் எம்.பி.க்களும், ஓரணியில் திரளுகின்றனர்...: புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டங்­கப்­பட வேண்­டிய முஸ்லிம் சமு­தா­யத்தின் பரிந்­து­ரை­களை வடி­வ­மைப்­ப­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உற...



கடந்த பொதுத்தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம்கள் தமக்கு விடிவு தேடித்தர சுயநல முஸ்லிம் அரசியல்வாதிகளால் முடியாது, முடிந்தாலும் செய்யமாட்டார்கள். தங்கள் இருப்பைக் காத்துக் கொள்ள எந்த கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமோ அத்தனையிலும் ஈடுபட்டார்கள் என்பதை நன்கு எடை போட்டனர்.



அதன் பயனே அம்மக்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் முற்றாகப் புறக் கணித்துவிட்டு, சுயமாக ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை மிகவும் நிதானமாக எடுத்திருந்தமை.



இதனால் தமக்கு ஏற்படவிருந்த பாதிப்பினை நன்கு அறிந்ததனாலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள், மைத்திரிக்கு ஆதரவு தர முன்வந்தனர். அப்போதுகூட அச்சந்தர்ப்பத்தைத் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.



இவர்கள் அக்காலங்களில் செய்தவைகளை மக்கள் இன்னும் மறந்துவிட வில்லை. முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பமும் அவர்கள் தங்களுக்கு இலாபம் சம்பாதிக்கும் தருணங்களாக மாற்றப்பட்டன.



சிலர் முஸ்லிம்களுக்கு எவ்வித அநியாயங்களும் நடக்கவில்லை. ஊடகங்கள் பொய் சொல்வதாகப் பகிரங்கமாகவே அறிக்கை விட்டனர்.



 அழுத்கம உட்பட நடந்த அநியாயங்களுக்கு முஸ்லிம்ளே காரணஸதர்கள் என கடந்த அரசால் பாராளுமன்றில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்தால் தமது அமைச்சுப் பதவிகளும், வருவாய்களும் முடங்கி விடும். மேலும் தமது கடந்த கால நடவடிக்கைகளுக்கு எதிராக விசாரணைகள் முடுக்கிவிடப்படும் என்ற அச்சத்தால், அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது பாராளுமன்றைப் பகிஸ்கரிப்பதாக கதையளந்து, அத்தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேற ஒத்துழைப்புக் கொடுத்தனர்.



இவர்கள் தற்போது ஒன்று கூடிஇருப்பது, முஸ்லிம்களின் நலனைக் காக்கவல்ல, அரசு செய்யவுள்ள ஏதோவோர், காரியத்தை எவ்வித எதிர்ப்பும் இன்றி, அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் ஏகாபித்த முடிவுடன்தான் நாம் நிறைவேற்றினோம் என்று கூறுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் தமது இருப்பு மற்றும் நன்மைகளை பெற்றுக் கொள்ளவும் தமக்கு வரவுள்ள துன்பங்களில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் என்பதை யூகிக்கலாம்.

No comments:

Post a Comment