Tuesday, February 16, 2016

Jaffna Muslim: திருமணங்களின் போது சீதனம், முற்றாக ரத்துச் செய்யப்...

Jaffna Muslim: திருமணங்களின் போது சீதனம், முற்றாக ரத்துச் செய்யப்...: இலங்கையில் திருமணங்களின் போது வரதட்சணை முறைமை முற்று முழுதாக ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய...



இஸ்லாம் திருமணத்தில் தெளிவான சட்டங்களைத் தந்துள்ளது. அதில் "மஹர்" என்னும் திருமணக் கொடையை மணமகளுக்குக் கொடுப்பதைக் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கு நல்ல பல காரணங்கள் உள்ளன.



மேலும், பெண்களுக்குச் சொத்துரிமையையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்களின் ஒரு பங்கை வைத்தே ஆண்களின் இரு பங்கு தீர்மானிக்கப்படுகின்றது. இதற்கும் காரணங்கள் உள.



சன்மானமும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகின்றது. சன்மானத்தை ஏற்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. சன்மானத்தால் பெறப்படுபவைகளில் கேள்வியும் இருக்காது.



மார்க்கத்தில் நிர்ப்பநதம் இல்லை என்பதும் மிகவும் பேணப்பட வேண்டியது. இது மார்க்கத்தைப் பின்பற்றுவதில் இலகு போக்கையும், மார்க்கத்தை அமுல் நடத்துவதில் குழப்பத்தையும் உருவாக்காத தன்மையையும் கருத்தில் கொண்டதே!



தகாத வார்த்தைகள் பேசும் உரிமை, பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, மார்க்கத்தை வெளிப்படுத்த முனைவோருக்கல்ல. தீமையைக் களைவதற்கு மிகச் சிறந்த நனமையையே அல்லாஹ் பரிந்துரைத்துள்ளான்.



ஆதலால் மார்க்கத்திலுள்ள உண்மைகளை வெளிப்படுத்தும் உரிமை அறிந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதை நடைமுறைப்படுத்த முனைவோர் குறிப்பாக சீதனம் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலும், மேற்சொன்ன இறை கட்டளைகளைப் புறந் தள்ளாது முதன்மைப்படுத்தி, கருத்தை முன் வைக்க வேண்டும். குளிப்பாட்டப் போனவர், முடியாவிடில் வில்கிக் கொள்வதைவிடுத்து, மலத்தை வாரி இறைப்பவராக மாறிவிடக் கூடாது. அதன் மூலம் பல நிராகரிப்பைச் செயதவராகியும் விடுவார்.



யாரும் யாருக்கும் பாதுகாவலரோ, பொறுப்பாளரோ, திருத்துபவரோ அல்லர். அவரவர் செய்தவற்றுக்கு அவரவரே பொறுப்பும், அவரவருக்கே கூலியும். சீர்திருத்தம் என்பது குழப்பம விளைவிப்பதாக அமைய முடியாது. அது இறை வழியாகாது.

No comments:

Post a Comment