Wednesday, July 13, 2016

Jaffna Muslim: 'பௌத்த பிக்குகள் பொல்லுகளுடன் மக்களை அச்சுறுத்துகி...

Jaffna Muslim: 'பௌத்த பிக்குகள் பொல்லுகளுடன் மக்களை அச்சுறுத்துகி...: மாலம்பே சீலரட்ன தேரர்  பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் பௌத்த மதத்தையே இழிவுபடுத்தி வருகின்றார் என ஐக்கிய ...



Ven Seelaratna Thero's request of Banning the BBS to the Government cannot be ignored.  Its a timely request to keep the country in peace and unity!

Monday, April 18, 2016

Jaffna Muslim: 21 முஸ்லிம் எம்.பி.க்களும், ஓரணியில் திரளுகின்றனர்...

Jaffna Muslim: 21 முஸ்லிம் எம்.பி.க்களும், ஓரணியில் திரளுகின்றனர்...: புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டங்­கப்­பட வேண்­டிய முஸ்லிம் சமு­தா­யத்தின் பரிந்­து­ரை­களை வடி­வ­மைப்­ப­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உற...



கடந்த பொதுத்தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம்கள் தமக்கு விடிவு தேடித்தர சுயநல முஸ்லிம் அரசியல்வாதிகளால் முடியாது, முடிந்தாலும் செய்யமாட்டார்கள். தங்கள் இருப்பைக் காத்துக் கொள்ள எந்த கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமோ அத்தனையிலும் ஈடுபட்டார்கள் என்பதை நன்கு எடை போட்டனர்.



அதன் பயனே அம்மக்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் முற்றாகப் புறக் கணித்துவிட்டு, சுயமாக ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை மிகவும் நிதானமாக எடுத்திருந்தமை.



இதனால் தமக்கு ஏற்படவிருந்த பாதிப்பினை நன்கு அறிந்ததனாலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள், மைத்திரிக்கு ஆதரவு தர முன்வந்தனர். அப்போதுகூட அச்சந்தர்ப்பத்தைத் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.



இவர்கள் அக்காலங்களில் செய்தவைகளை மக்கள் இன்னும் மறந்துவிட வில்லை. முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பமும் அவர்கள் தங்களுக்கு இலாபம் சம்பாதிக்கும் தருணங்களாக மாற்றப்பட்டன.



சிலர் முஸ்லிம்களுக்கு எவ்வித அநியாயங்களும் நடக்கவில்லை. ஊடகங்கள் பொய் சொல்வதாகப் பகிரங்கமாகவே அறிக்கை விட்டனர்.



 அழுத்கம உட்பட நடந்த அநியாயங்களுக்கு முஸ்லிம்ளே காரணஸதர்கள் என கடந்த அரசால் பாராளுமன்றில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்தால் தமது அமைச்சுப் பதவிகளும், வருவாய்களும் முடங்கி விடும். மேலும் தமது கடந்த கால நடவடிக்கைகளுக்கு எதிராக விசாரணைகள் முடுக்கிவிடப்படும் என்ற அச்சத்தால், அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது பாராளுமன்றைப் பகிஸ்கரிப்பதாக கதையளந்து, அத்தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேற ஒத்துழைப்புக் கொடுத்தனர்.



இவர்கள் தற்போது ஒன்று கூடிஇருப்பது, முஸ்லிம்களின் நலனைக் காக்கவல்ல, அரசு செய்யவுள்ள ஏதோவோர், காரியத்தை எவ்வித எதிர்ப்பும் இன்றி, அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் ஏகாபித்த முடிவுடன்தான் நாம் நிறைவேற்றினோம் என்று கூறுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் தமது இருப்பு மற்றும் நன்மைகளை பெற்றுக் கொள்ளவும் தமக்கு வரவுள்ள துன்பங்களில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் என்பதை யூகிக்கலாம்.

Tuesday, February 16, 2016

Jaffna Muslim: திருமணங்களின் போது சீதனம், முற்றாக ரத்துச் செய்யப்...

Jaffna Muslim: திருமணங்களின் போது சீதனம், முற்றாக ரத்துச் செய்யப்...: இலங்கையில் திருமணங்களின் போது வரதட்சணை முறைமை முற்று முழுதாக ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய...



இஸ்லாம் திருமணத்தில் தெளிவான சட்டங்களைத் தந்துள்ளது. அதில் "மஹர்" என்னும் திருமணக் கொடையை மணமகளுக்குக் கொடுப்பதைக் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கு நல்ல பல காரணங்கள் உள்ளன.



மேலும், பெண்களுக்குச் சொத்துரிமையையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்களின் ஒரு பங்கை வைத்தே ஆண்களின் இரு பங்கு தீர்மானிக்கப்படுகின்றது. இதற்கும் காரணங்கள் உள.



சன்மானமும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகின்றது. சன்மானத்தை ஏற்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. சன்மானத்தால் பெறப்படுபவைகளில் கேள்வியும் இருக்காது.



மார்க்கத்தில் நிர்ப்பநதம் இல்லை என்பதும் மிகவும் பேணப்பட வேண்டியது. இது மார்க்கத்தைப் பின்பற்றுவதில் இலகு போக்கையும், மார்க்கத்தை அமுல் நடத்துவதில் குழப்பத்தையும் உருவாக்காத தன்மையையும் கருத்தில் கொண்டதே!



தகாத வார்த்தைகள் பேசும் உரிமை, பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, மார்க்கத்தை வெளிப்படுத்த முனைவோருக்கல்ல. தீமையைக் களைவதற்கு மிகச் சிறந்த நனமையையே அல்லாஹ் பரிந்துரைத்துள்ளான்.



ஆதலால் மார்க்கத்திலுள்ள உண்மைகளை வெளிப்படுத்தும் உரிமை அறிந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதை நடைமுறைப்படுத்த முனைவோர் குறிப்பாக சீதனம் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலும், மேற்சொன்ன இறை கட்டளைகளைப் புறந் தள்ளாது முதன்மைப்படுத்தி, கருத்தை முன் வைக்க வேண்டும். குளிப்பாட்டப் போனவர், முடியாவிடில் வில்கிக் கொள்வதைவிடுத்து, மலத்தை வாரி இறைப்பவராக மாறிவிடக் கூடாது. அதன் மூலம் பல நிராகரிப்பைச் செயதவராகியும் விடுவார்.



யாரும் யாருக்கும் பாதுகாவலரோ, பொறுப்பாளரோ, திருத்துபவரோ அல்லர். அவரவர் செய்தவற்றுக்கு அவரவரே பொறுப்பும், அவரவருக்கே கூலியும். சீர்திருத்தம் என்பது குழப்பம விளைவிப்பதாக அமைய முடியாது. அது இறை வழியாகாது.

Friday, February 12, 2016

Jaffna Muslim: ஞானசாரருக்கு எதிராக 50 க்கும் மேற்பட்ட வழக்குகள்

Jaffna Muslim: ஞானசாரருக்கு எதிராக 50 க்கும் மேற்பட்ட வழக்குகள்: பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நாட்டின் பல்­வேறு நீதி­மன்­றங்­க­ளிலும் சுமார் 50க்கும் ...



தஃவா என்பது வெறுமனே குர்ஆன், ஹதீஸைக் கொண்டு செய்யப்படுவதல்ல!



அதற்கு பொறுமை, ஆழ்ந்த புலமை, தெளிந்த ஞானம், வளர்ந்த முதிர்ச்சி, நிதானம், நடுநிலை, வார்த்தைகளைக் கையாளும் திறன், புண்படுத்தாப் பண்பு, கண்ணியம் காக்கும் குணம், உணர்வுகள்

சீண்டப்படாமல், இனங்கள் தூண்டிவிடப்படாமல், குணங்கள் சேதப்படுத்தப்படாமல் கருத்தேற்றும் ஆளுமை, எரிச்சல்படுத்தாத தோற்றம், உண்மை, நேர்மை, பொறுமை, வன்மை, வாய்மை, வாக்குத் தவறாமை, நோக்கு பிழையாமை, முகபாவம், போன்ற அனைத்து நற்குணங்களும் கொண்டவராக, தகுதியானவராக இருக்க வேண்டும்.



நபிகளாரை அல்லாஹ் குர்ஆனை வெளிப்படுத்த தேர்ந்தவரைப் பற்றிக் கூறும் போது " நீர் உயர் குணத்தின் உன்னத நிலையில் இருக்கிறீர்" என்று கூறுவதிலிருந்து அறியலாம்!



பாலர் பாடசாலையில் படிப்பிப்போர்கூட தகுதிகள் கொண்டோராகவே இருக்கின்றனர். தஃவா பணி மிக உயர்ந்தது. சமுதாயங்களின் அழிவோடு தொடர்பானது என்பது மிகுந்த அபாயத்தினை விளக்குவது.



 அத்துமீறல்களும், சுத்துமாத்துகளும், சித்து விளையாட்டுக்களும், வெத்து வேட்டுக்களும், குத்திக் குதறல்களும் நீர்த்துப் போக வைத்துவிடும் தஃவாவை!

Jaffna Muslim: ஞானசாரரை மனநல மருத்துவரிடம் காண்பித்து, அறிக்கை பெ...

Jaffna Muslim: ஞானசாரரை மனநல மருத்துவரிடம் காண்பித்து, அறிக்கை பெ...: -பஸீர் + விடிவெள்ளி- சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரர் ஹோமகம நீதிமன்றத்தில் 09.02.2016 ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது நீதிபதி ரங்க திசாநா...



One before last three are very serious findings !

Wednesday, February 10, 2016

Jaffna Muslim: பொது பலசேனாவுக்காக குனூத் ஓதியவர்கள், உம்மாவின் அவ...

Jaffna Muslim: பொது பலசேனாவுக்காக குனூத் ஓதியவர்கள், உம்மாவின் அவ...: -முஹம்மது ராஜி- இப்போது நாடு இருக்கிற நிலையில் இப்படி ஒரு கவிதை தேவைதானா என்றான் தேசியவாதத்துக்கு எதிராக நான் எழுதிய கவிதைக்கு  கருத்த...



நம்மில் அநேகர் மன இச்சையை மார்க்கமாக ஆக்கிக் கொண்டுள்ளனர்!



மார்க்கம் கூறிய வழியில் நடப்பதை விடுத்து, தமது செயற்பாடுகளுக்கு மார்க்கத்தில் ஆதாரம் தேடுகின்றனர்!



மார்க்கத்தில் தமது நிலை பற்றி சிந்திப்பவரோ, சுயமதிப்பீட்டைச் செய்பவரோ இல்லை!



 அனைவரும் அடுத்தவனில் பிழை தேடுவதிலும், அவர்களை மனம் போனவாறு விமர்சிப்பதிலும், தூற்றுவதிலும், பட்டப் பெயர் சூட்டி, நையாண்டி பண்ணுவதிலும் தமது முழுச் சக்தியையும் செலவழிக்கிறார்கள்.



அதனைச் செய்து விட்டால் தாம் ஒரு உத்தம இஸ்லாமியனாக உள்ளோம் என்ற மாயையில் மூழ்கி உள்ளனர்.



சுய இலாபங்களுக்காக தேசியம், தேசியத் தலைமை, பிரதேசம் போன்ற சொற்களைத் தாராளமாகவே பேசி முஸ்லிம்களை எவ்வாறெல்லாம் கூறு போடலாமோ அவ்வாறெல்லாம் பிரித்தாளும் நரித்தனத்தில் மூழ்குகின்றனர்.



தேசபக்தி இருப்பது வரவேற்கப்படலாம், அதுவே மார்க்கத்தை விலையாக்குவதாக மாறிவிடக் கூடாது. நியாய, அநியாயங்களைத் தீர்மானிப்பதாக ஆகிவிடக் கூடாது.



மதவாதிகளும் அரசியல் வியாபாரிகளுக்கு சோரம் போய் விட்டார்கள். மார்க்கம் தேவைக்கேற்றபடி விளக்கப்படுகின்றது.